கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த காவல் துறை அதிகாரிகள் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளதன் காரணமாக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை பேலியகொடை மீன்சந்தை வளாகத்தில் ஆயிரத்து 186 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றுவந்துள்ள அனைவரும் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.