இலங்கையில் சாதி மதம் இனம் எதுவும் பார்க்காமல் செயற்படும் ஒரு சேவை இரத்த மாற்று சேவை. எல்லோருக்கும் இரத்த வகைகள் நான்கு என்றுதான் தெரியும். ஆனால் அதற்குள்ள பல உட்பிரிவுகள் உள்ளன. சில மிக அரிதானவை. அந்த அரிதான இரத்த வகைகள் கையிருப்பில் ஒரு சில இரத்த வங்கிகளில் தான் இருக்கும்.
ஒரு வைத்தியசாலையில் ஒரு நோயாளிக்கு தேவையான இரத்த வகை இல்லை என்றால் அது இருக்கிற இரத்த வங்கியிலிருந்து இரத்தம் அம்பியூலன்சில் பெறப்படும். உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு அரிதான இரத்தவகை தேவைப்பட்டால் கொழும்பிலிருந்து கூட இரத்தம் பெறப்படும். இங்கே இனவாதமோ மதவாதமோ பார்க்கப்படாது.
இவ்வாறு இரத்தத்தை மற்ற வங்கிகளிலிருந்து அவசர நிலமைகளில் பெறுவது சாத்தியமாகாது.உதாரணத்திற்கு ஒருவர் அடிபட்டு இரண்டு லீட்டர் இழந்து விட்ட நிலையில் இன்னொரு இடத்திலிருந்து இரத்தம் பெற முடியாது.அதற்காக ஒவ்வொரு வைத்தியசாலையிலும் குறிப்பிட்ட அளவு இரத்தம் கையிருப்பில் இருக்க வேண்டும்.
வடக்கிலே இருக்கும் மிகப்பெரிய இரத்த வங்கி யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளது. அது யாழ் நகருக்கு மட்டுமல்ல, தேவையானபோது மற்ற சிறிய வைத்தியசாலைகளுக்கும் இரத்தம் விநியோகிக்க வேண்டிய தேவை உள்ளது.
இப்போதைய நிலமை காரணமாக யாழ் இரத்த வங்கியில் பாரிய இரத்தத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. யாழ் குருதி மாற்றீடு வைத்திய நிபுணர் ஒரு நாளைக்கு பத்து பேர் இரத்தம் வழங்கினாலே தேவையை ஓரளவு பூர்த்தி செய்யலாம் என்கிறார்.
உங்கள் உறவினர்களின் ஞாபகமாக , உறவுகளின் பிறந்த தின ஞாபகமாக , அல்லது எந்த காரணமும் கூட இல்லாமலேயே நீங்கள் இரத்தம் கொடையளிக்கலாம். அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவை இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்யலாம்.
0212223063 இது யாழ் இரத்த வங்கி இலக்கம். நீங்களே நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் உடல் நிலை நன்கு சோதிக்கப்பட்டே இரத்தம் பெறப்படும். இரத்தம் கொடுப்பதால் உங்களுக்கு எந்த தீங்கும் வராது. மாறாக நன்மையே கிடைக்கும்.
வடக்கிற்கான இரத்தத் தேவையை நாம்தான் தீர்க்கவேண்டும். எல்லோரும் முன்வாருங்கள். இந்த செய்தியை எல்லோரிடமும் கொண்டு சேருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது