கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுகவனயீர்ப்பு போராட்டம்ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
மாதம் தோறும் 30ம் திகதி குறித்த போராட்டம் அவ்வமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது என்பதுடன், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது தொடர் போராட்டம் இன்று 1349வது நாளாக தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த போராட்டத்தின் பின்னர் வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கத்தின் தலைவர் கலாரஞ்சினி கருத்து தெரிவித்தார்.