பிரேஸிலில் டிஜிட்டல் முறையில் ஆடை அலங்கார அணிவகுப்பு!

பிரேஸிலில் கொரோனா அச்சம் காரணமாக ஆடை, அலங்கார அணிவகுப்பு காட்சிகள் அங்குள்ள முக்கிய வீதிகளில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந் நாட்டில் ஸா பாலோ வில் கொண்டாடப்படும் ஃபேஷன் வீக் கொரோனாத் தொற்றுக் காரணமாக தற்போது கொண்டாட முடியாத நிலையுள்ளது.

எனவே அந்த நிகழ்ச்சிகளை டிஜிட்டல் முறையில் முக்கிய வீதிகளிலுள்ள சுவர்களில் ஒளிபரப்பவுள்ளனர். இந் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.