கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 391 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,162 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16,643 அதிகரித்துள்ளது.
இதுவரை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 14,069 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.