சேவையே கடவுள் – ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி

i3 14 1
i3 14 1

சென்னை அசோக் நகரில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆசிரமத்தை சேர்ந்த 18 குழந்தைகள் மற்றும் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை லாரன்ஸ் உறுதிபடுத்தியிருந்தார். அவர்கள் அனைவரும் சென்னை லயோலா கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், 21 பேரும் பூரணமாக குணமடைந்துவிட்டதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ” ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர விரும்புகிறேன். எனது குழந்தைகள் சிகிச்சை முடிந்து பத்திரமாக ஆசிரமத்துக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா இல்லை என சோதனை முடிவுகள் வந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நான் நம்பியபடி நான் செய்த சேவை எனது குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளது. குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சேவையே கடவுள் என டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.