நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது உகந்தது

oes
oes

நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.