கொரோனா நோயிலிருந்து மக்களை மீட்பதற்க்கான வேண்டுதல் பால் குட பவனியும் மகா சுதர்சன யாகமும் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
ஆலய பிரதம குரு தலமையில் இடம் பெற்ற இந்த யாகம் உலகில் இடர்கள் வருகின்ற போது இடர்களிலிருந்து மக்களை காக்கவேண்டியும் கிருஸ்ண பகவானின் ஆசி வேண்டியும் இடம் பெறுவது முக்கியமானது. இந் நிலையில் இன்று இவ் மகா சுதர்சன் யாகம் இடம் பெற்றது.
முன்னதாக காலை 6:00 மணியளவில் பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் கொவிலிருந்து 108 பால் குட பவனியாக வல்புர ஆழ்வார் ஆலயத்திற்க்கு மந்திகை ஊடாக பால் குட பவனியாக பால் கொண்டு வந்தே இவ் மாகா சுதர்சன் யாகம் வல்லிபுர ஆழ்வாரில் இடம்பெற்றது பெற்றது விசேட அம்சமாகும்.