பாவிகளின் செயற்பாடுகளே தோல்விக்கு காரணம்!!

7 d 1
7 d 1

கட்சிக்குள் இருந்த சில பாவிகளின் செயற்பாடுகள் காரணமாகவே தோல்வியை சந்திக்க நேர்ந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கட்சியில் இருந்த சிலரின் செயற்பாடுகள் காரணமாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட எடுத்துக்கொண்ட காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பல இடங்களுக்கு சென்று பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தார்.

பொதுத் தேர்தலுக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகிக்க இடமளிக்குமாறு கேட்டால் அதற்கு இணங்க முடியாது.

அப்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டால் எமக்கு தனியாக பிரிந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும். தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே நாட்டு மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தார்கள்.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு தற்போதைய புதிய அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் தக்க பதிலை வழங்கும்.

அதன் பிரதிபளிப்பை மக்கள் விரைவில் காண்பர். புதிய நாடாளுமன்றத்திலும் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக ஒரு அணி உருவாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.