அங்கொட லொக்காவின் சகாக்கள் மூவர் கைது

4 sd
4 sd

கேரள கஞ்சாவுடன் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் அங்கொட லொக்காவின் சகாகக்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முல்லேரியாவில் உள்ள அம்பதலே பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்படவர்களிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.