எரிபொருள் விலை சூத்திரம் இறுதி முடிவு இல்லை

09d
09d

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தை செயற்படுத்தவோ, அல்லது இரத்து செய்வதற்கோ இறுதி முடிவு எட்டப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விவாகரம் குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று இறுதி முடிவு எட்டப்படும் என்றும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரம் 2019ஆம் ஆண்டு மே மாதம் கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, குறைப்பு என்பவற்றுக்கேற்ப மாதாந்தம் 10ஆம் திகதி இலங்கையில் எரிபொருளில் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்தது.

எனினும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தை இரத்து செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.