நாட்டுக்கு எதிரான அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு தாய் நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாக வித்தியாலங்கார பிரிவெனாதிபதி கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
களனி வித்தியாலங்கார விகாரைக்கு நேற்று (சனிக்கிழமை) சென்ற ஜனாதிபதி அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் தேரரை சந்தித்து ஆசிப்பெற்றபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் களனி ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விகாராதிபதி கொள்ளுபிட்டிய மஹிந்த சங்கரக்கித தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் இதன்போது ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியிருந்தனர்.