அபேக்ஷா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருந்து மாபியா தொடர்பாக அதன் பணிப்பாளர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் கடந்த அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினதும் சீரற்ற முகாமைத்துவத்தையே எடுத்துக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க் கட்சித் தலைவராக செயற்பட முடியாதுள்ளதாகவும், இதனால் பாராளுமன்றத்தில் பலமான எதிர்க் கட்சியொன்று இல்லாதுபோகும் நிலைமை உருவாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.