மஞ்சிமா மோகனுக்கு காலில் எலும்பு முறிவு

i3 4
i3 4

 நடிகை மஞ்சிமா மோகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக் தமிழில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். சிறிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது விஜய் சேதுபதியோடு ‘துக்ளக் தர்பார்’, விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய நடிகை மஞ்சிமா மோகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு சில நாட்கள் முழு ஓய்வில் இருந்தார்.

தற்போது அது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முன்னதாக என்னிடம் ‘நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான நிலைமை என்ன?’ என்று சிலர் கேட்டபோது, ‘அதிர்ஷ்டவசமாக இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை என்று கூறினேன். ஆனால் இப்போது அது எனக்கு நிகழ்ந்து விட்டது.

படுத்த படுக்கையிலேயே சில நாட்கள் இருப்பது எளிதானது அல்ல. என் வேலை உள்பட பல விஷயங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் என்னை நானே புரிந்து கொள்வதற்கு இந்த காலம் எனக்கு கைகொடுத்தது. இப்போது நான் என்னை முழுமையாக உணர்கிறேன். இந்த நிலைமை என்னை முற்றிலும் மாற்றிவிட்டது மட்டுமின்றி என்னை ஒரு வலிமையான நபராக்கியுள்ளது” என மஞ்சிமா தெரிவித்துள்ளார்.