பொய்க்குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூட்டமைப்பு முறைப்பாடு!

tna
tna

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை தாம் பதிவு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டக தெரிவித்துள்ளனர் .

திலீபனின் நினைவேந்தலை ஏற்பாடு செய்ததாகக் கூறி தம் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா. அரியநேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு கிளையில் முறைப்பாட்டினை பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .