சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர்

07 ff
07 ff

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 7 ஆவது பணிப்பாளா் நாயகமாக ரியா் அட்மிரல் ஆனந்த பீரிஸ் நேற்று மொரட்டுவையில் உள்ள சிவில் பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக காட்டு யானைகளை பாதுகாத்தல் மற்றும் மனிதன் – யானைகள் மோதலில் இறப்பைத் தடுத்தல் என்பவற்றுக்கு  சிவில் பாதுகாப்புப் படையினா் ஊடாக பாதுகாப்பளிப்பதற்கு ஒரு முறையான திட்டமொன்றை வகுத்துள்ளதாக புதிய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் பாதுகாப்புப் படையினா்களை துார இடங்களில் கடமையாற்றுவதை தவிர்த்து அவா்கள் வாழும் பிரதேசத்திலேயே கடமைகளுக்கு அமா்த்துவதற்கு திட்டம் வகுத்துள்ளதாகவும் பணிப்பாளா் நாயகம் ஆனந்த பீரிஸ் ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளார்.