மஹிந்த தேசபிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் காலம் நெருங்கி விட்டதால், இனிமேல் அவரது இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கோட்டாபய ராஜபக்ச, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிற்கு முன்பாக, மஹிந்த தேசப்பிரிய பதவிவிலக முடியாதெனவும் இராஜினாமாவை ஏற்பதாக இருந்தால், தேர்தல் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.