சொய்சாவின் பதவி இடைவெளிக்கு யார்?

5 d
5 d

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் மரணம் காரணமாக உருவான எம்.பி. பதவி வெற்றிடத்துக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, அதன் முடிவை இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பதவி வெற்றிடம் குறித்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூட்டத்தின் பின்னர் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

காலஞ் சென்ற ரஞ்சித் டி சொய்சாவுக்கு அடுத்த படியாக 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளை, அப்போதைய ஐ.ம.சு.மு. வேட்பாளர் வருண லியனகே பெற்றிருந்தார்.

அவர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நிவித்திகலை ஆசனத்திற்கான அமைப்பாளராக காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.