கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா!

1604416293 kilinochchi 2
1604416293 kilinochchi 2

கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மலர்ச்சாலை நிலையத்தில் பணியாற்றும் 20 வயது இளைஞனுக்கே அநுராதபுரம் பரிசோதனைக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இரு வாரங்களுக்கு முன்னர், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்புபட்ட குடிதண்ணீர் விற்பனை நிலையம், மலர்ச்சாலை பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதில் குடிதண்ணீர் விற்பனை நிலையத்துடன் தொடர்புடைய மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையிலேயே மலர்ச்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.