மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனை ஒன்று இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனை தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது மாகாணசபை தேர்தல் நடத்துவதற்காக யோசனையைத் தாம் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்த பிரதமர் மகிந்தராஜபக்ஷ, மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான வழிகளை ஆராயுமாறு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.