கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற மூவர் கைது!

e880cb59 28c5 4f2b 8d32 f89ca8ccc7c1 1
e880cb59 28c5 4f2b 8d32 f89ca8ccc7c1 1

வியாபார நோக்கத்துடன் சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற மூவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைனரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை கொடிகாமம் மிருசுவிலில் இன்று இடம்பெற்றுள்ளது.

பளையைச் சேர்ந்த இருவரும் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிராம் கஞ்சா போதைப்பொருள், முச்சக்கர வண்டி மற்றும் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் உப காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர்.

சந்தேக நபர்கள் கொடிகாமம் காவல்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப்பொருள்களும் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இன்று சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.