தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், நாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சத்தினை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.