பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி இன்றையதினம் மலையகத்தில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவாக நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி இன்று கொழும்பு- ஐந்துலாம்பு சந்தியில் கொழும்பு வாழ் தமிழர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.