மந்திகை மடத்தடியில் காவல்துறையினரின் தடையை உடைத்து முன்னேறியது பேரணி!

IMG 5836 1
IMG 5836 1

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியைத் தடுக்க மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து காவல்துறையினர் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி அதனை உடைத்து முன்னேறியது.

பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கும் பேரணியை மந்திகை மடத்தடியில் வீதியின் குறுக்கே நின்று காவல்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவை வைத்து தடுக்க முயன்றனர். பேரணியில் வந்தோரை பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் காவல்துறையினர் அகன்றனர்.

பருத்தித்துறை செல்லும் பேரணி அங்கிருந்து வல்வெட்டித்துறை சென்று பொலிகண்டி என்ற இலக்கை இன்று மாலை சென்றடையும். அங்கு பேரணியில் பங்கேற்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஒரே குரலில் வாழ்வுரிமையை வலியுறுத்தி சர்வதேசத்திடம் நீதி கோருவார்.