அரசியல் கைதிகள் எவரும் சிறைச்சாலைகளில் இல்லை – நாடாளுமன்றில் மஹிந்த அறிவிப்பு

photo mahinda
photo mahinda


இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் குற்றச்சாட்டுகளின் கீழ் எந்தவொரு கைதியும் தடுத்து வைக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவைக்கு அமைவாகவோ அல்லது நாட்டின் வேறு சட்டங்களுக்கு அமையவோ தண்டனை வழங்கப்பட்டுள்ள மற்றும் சந்தேகத்தில் தடுத்து வைக்ககப்பட்டுள்ள கைதிகளிடையே அரசியல் குற்றச்சாட்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் இல்லை.

மேலும், வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும் சாணக்கியனால் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் குறிப்பிட்ட பிரதமர், “இந்தக் கேள்வி தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பானது என்பதால் அது தொடர்பாகப் பதிலளிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.