காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தலைவி மீது விசாரணை

IMG 20210308 113702
IMG 20210308 113702

சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து முல்லைத்தீவில் நேற்று (08.03.2021) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த பேராட்டத்தை ஏற்ப்பாடு செய்திருந்தனர்

அந்த வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி அவர்களை முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்

தற்போது முல்லைத்தீவு காவல் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது