நாளை முதல் 4 வகையான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளை இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை கவனத்திற்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அதிகார சபைத் தலைவர் சிறிபால அமரசிங்க, நான்கு பொலித்தீன் வகைகளுக்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும், விவசாய இரசாயனம் அடங்கிய போத்தல் மற்றும் பக்கற்றுக்கள் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காது துடைப்பான்கள் முழுமையாக தடை செய்யப்படவுள்ளன.
எனினும், மருத்துவ ஆய்வு மற்றும் வைத்தியசாலை பயன்பாட்டுக்கான உற்பத்திகள் தடைசெய்யப்படவில்லை.
இதேநேரம், காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைத் தலைவர் சிறிபால அமரசிங்க தெரிவித்துள்ளார்.