யாழ் மாநகரில் காவல் படை நியமித்தமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிமண்ணன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் அழைத்து செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று அதிகாலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
காலையில் இருந்து மாலை 6.30 மணிவரை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்காக மீண்டும் யாழ்ப்பாணம் அழைத்து செல்லப்பட்டார்.