ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களிற்கிடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உட்கட்சி மோதலால் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் மற்றும் இளைஞரணி தலைவர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றையதினம் பிரதேச சபை உறுப்பினரான குறித்த கட்சியினுடைய இளைஞர் அணி தலைவர் வைத்தியசாலையில் இருந்து வீடுதிரும்பிய நிலையில் வவுனியா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் உதவிசெயலர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.