தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமல்ராஜபக்சவுக்குமிடையில் சந்திப்பு!

2f22037a 5c24 4f35 9bbd bcc428aa57b6 1
2f22037a 5c24 4f35 9bbd bcc428aa57b6 1

தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர் சமல்ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

95fe614f b8b5 4380 8221 f22eba1d349a

இதன் போது பல்வேறு விடயங்களுக்குஅமைச்சர் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதுடன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்கவும் இணக்கம் தெரிவித்தார். 

2f22037a 5c24 4f35 9bbd bcc428aa57b6

அத்துடன் முல்லை  கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையார் பிரிவுகளதும் காணி நிர்வாகத்தினை மகாவலி அதிகார சபை பொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் அமைச்சர் சமல்ராஜபக்ச பணித்துள்ளார்.

இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும் வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாக நடைபெறாதெனவும் அவர் கூறியுள்ளார்