மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த 10 பேர் கைது

mqdefault
mqdefault

மட்டக்களப்பு நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வை தலைமைவகித்து செய்திருந்த லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அவருடைய வீட்டிற்கு 3 தடவைகள் காவல்துறையினர் சென்ற போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் மனைவியார் அதனை பெறமாட்டேன் என தெரிவித்த நிலையில் அவரின் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை காவல்துறையினர் ஓட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட லவக்குமார் இன்று பகல் 10 பேருடன் சென்று நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி அதன் பின்னர் பூக்களை கடலில் தூவினர் இதனை படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்த நிலையில் காவல்துறையினர் குறித்த 10 பேரையும் அடையாளம் கண்டு அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை 3 நாள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.