நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்த நடமாட்டத் தடையானது நாளை (25) அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டாலும், அக்காலப்பகுதியினுள் உணவு மற்றும் மருந்து பொருள் கொள்வனவு போன்ற அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி நேற்று அறிவித்திருந்தார்.
அவ்வாறே, நாளை (25) இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும் நடமாட்டத் தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.
நடமாட்டத் தடை தளர்த்தப்படும் காலப்பகுதியினுள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் செல்லுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார்.