நாட்டில் இன்று மேலும் 898 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று இதுவரையில் 2,706 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 169,878 ஆக அதிகரித்துள்ளது.