தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 22 பேருக்கு மீண்டும் அறிகுறி

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 3
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 3

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நோய் அறிகுறிகள் காட்டிய 22 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது காணப்படும் எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதம் வழங்க முடியாது என, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறியுள்ளார்.

மேலும், இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை நோய் எதிர்ப்பு சக்தி காணப்படும் என கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.