தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு அக்கறை காட்டுங்கள்- இலங்கை வைத்திய சங்கம்

gmoa 1
gmoa 1

தேர்தல் காலப்பகுதிகளில், நடமாட முடியாத வயோதிபர்கள் மற்றும் நோயாளர்களை கதிரைகளில் வைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு தூக்கிச் செல்வதை போன்று, தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் அக்கறை காட்டுமாறு இலங்கை வைத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் நடத்தையை அவதானிக்கையில், அதன் சாதகமான பெறுபேற்றை பெறமுடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.