மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் – அஜித் ரோஹண

Ajith rohana 1
Ajith rohana 1

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என காவல்துறை ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும்வரை வெளியில் வரமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.