கிளிநொச்சியில் புதிதாக மேல்நீதிமன்றம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் கழிவுகள் அருகாமையில் உள்ள வீதிகளில் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. அதனால் அவ்வீதியால் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர். அக்குப்பைகளில் பலகையில் அடிக்கப்பட்ட ஆணிகள், கம்பிகள் என்பன காணப்படும் நிலையில் அவ்வீதியால் சைக்கிளில் கல்விநிலையங்களுக்கு மாணவர்கள் செல்லும் நிலையில் சைக்கிள் ரியூப்களில் ஆணி ஏற்றினால் காற்று செல்வதாகவும் மக்களின் கால்களில் ஏற்றினால் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவ்வூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக கட்டிட ஒப்பந்தாரர் மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் நாடுபூராகவும் காணப்படுகின்றன. அவையனைத்தும் தீர்க்கப்படும் வரை தமிழ்க்குரல் அவதானிக்கும்.