கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் – ஹேமந்த ஹேரத்

கலாநிதி ஹேமந்த ஹேரத்
கலாநிதி ஹேமந்த ஹேரத்

சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, கொவிட்19 பரவல் நிலைமை மேலும் பாரதூரமாகும் அபாயம் இருப்பதாக, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

இந்தவிடயம் இலங்கையின் சுகாதார நிலைமையையும், கொவிட் பரவல் நிலைமையையும் மேலும் அபாயத்துக்கு உள்ளாக்கும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.