எதிர்காலத்தில் நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (06) விசேட அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் உரத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.