நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – ராஜித!

1 V Rajitha
1 V Rajitha

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மைக்காலத்தில் நாட்டின் தனியார் துறை சந்தைகளில் கூட அத்தியாவசியமான மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.