நாட்டை திறக்கும் சாத்தியம்; சுகாதார வழிகாட்டல் விரைவில்

curfew colombo
curfew colombo

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே நாடு திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கான சுகாதார வழிகாட்டல்கள், கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.