சிகரெட்டுக்கான வரியை அதிகரியுங்கள் ;செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம்

Selvam Adaikalanathan 1
Selvam Adaikalanathan 1

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இன்று (28) அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது.

இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது.

ஒரு சிகரெட்டின் விலையினை ரூபாய் 20 தினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயினை இழக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இன்று பெரும்பாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகி காணப்படுவதினாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவிற்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.