அரசின் பங்காளிக் கட்சிகள் கொழும்பில் முக்கிய பேச்சு

123 1
123 1

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உட்பட தேசிய வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கும் முடிவு பாரதூரமானது எனச் சுட்டிக்காட்டிய தொழிற்சங்கப் பிரமுகர்கள், இதைத் தடுப்பதற்கு பங்காளிக் கட்சிகள் தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குப் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன், தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் அறிவித்துள்ளன.