மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை குறிப்பிட முடியாது- டலஸ்

yyyyy
yyyyy

மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இப்போது உறுதியாகக் குறிப்பிட முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தேர்தல் முறைமை தொடர்பில் பிரச்சினை இருக்கின்றது. குறிப்பாக 2017 இல் கடந்த அரசால் முன்வைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமானது, பல முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது. எனவே, முதலில் அதனைச் சரி செய்ய வேண்டும்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை இப்போது உறுதியாகக் குறிப்பிட முடியாது.

தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடும். இவ்வருடத்துக்குள் அதனைச் செய்யமுடியாது.” – என்றார்.