குற்றவாளிகள் விடுதலை; அப்பாவிகள் சிறைகளில்! – கிரியெல்ல

123456789
123456789

“நாட்டில் அப்பாவிகள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை, குற்றவாளிகள் சகலரும் தற்போது விடுதலையாகிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாட்டில் அப்பாவிகள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை, குற்றவாளிகள் சகலரும் விடுதலையாகிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க வேண்டும்.

நாட்டில் நீதிப்பொறிமுறை, நியாயப்பாடுகள் நாளுக்கு நாள் அழிக்கப்படுகின்றன என்ற கருத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் உருவாகியுள்ளது.

நாட்டில் அவசர அவசரமாக சட்டம் இயற்றப்படுகின்றது. புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்டத்தரணிகளைக் கொண்டு இந்த அரசமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இப்போது புதிய அரசமைப்பைக் கொண்டு வருகின்றனர். ஆனால், அதனை நாம் பார்க்கவே இல்லை. நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இதனைக் கொண்டுவந்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை – கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு சர்வதேசம் இலங்கையை அங்கீகரிக்கும் விதமாக சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுப்பது அவசியம்” – என்றார்.