அறுபது வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களான நோய் நிலைமைகளைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மூன்றாவது (செயலூக்கி) கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியைச் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இந்தத் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தத் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.