மின்சார நெருக்கடி ஏற்படாது- கம்மன்பில அறிவிப்பு

uthaya kampanpila
uthaya kampanpila

எண்ணெய் சுக்திகரிப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூடியதாலும், மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படாது. எனவே, நாடு இருளில் மூழ்கும் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வெளிநாட்டில் இருந்து கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் மூலம் டொலர் கிடைக்குமானால் நானும் திறைசேரிக்கு முன்னால் சென்று போராடத் தயாராகவே இருக்கின்றேன்” – என்றார்.