கூட்டமைப்பை சந்திக்கும் விடயத்தில் அக்கறையுடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

Prof GL Peiris to Bangladesh copy
Prof GL Peiris to Bangladesh copy

ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தில் இன்னும் அக்கறையுடன் இருப்பதாக, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(30) காலை இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரியும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, பயங்கரவாத தடை சட்டத்துக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ள சுமந்திரன், இந்த திருத்தங்கள் புதியனவல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் விடயத்தை ஒத்திவைப்பது குறித்தும் இதன்போது சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.