பதவி விலகுவதை பிரதமரிடமும் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி கோட்டாபய

download 3
download 3

முன்னதாக அறிவித்தப்படி தாம் குறித்த நாளில் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, நாளை மறுதினம்(13) ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகுவதாக சபாநாயகருக்கு முன்னதாக அறியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.