பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்யக்கோரியும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரியும் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய கையெழுத்து போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இன்று (28) காலை 10மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம், இலுப்பையடி பகுதிகளில் வவுனியா மாவட்ட மக்கள் திட்ட ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், அவ் அமைப்பின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கையெழுத்துக்களை இட்டு ஆதரவினை வழங்கியிருந்தனர்.